Sivarchana Chandrikai – Guru Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – குருபூசை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
குருபூசை

பின்னர், தமது பீடத்திலிருக்கும் குருவையடைந்து அவருடைய பாதங்களைச் சுத்திசெய்து பரமசிவன் என்னும் புத்தியுடன் சந்தனம் முதலியவற்றால் பூசித்து, மூன்று புஷ்பாஞ்சலிகள் செய்து, சாஷ்டாங்கமாக மூன்றுமுறை நமஸ்கரித்து எழுந்து, பூமியில் முழங்கால்களை வைக்கொண்டும் இருகைகளைக் குவித்துக்கொண்டும் குற்றங்களைப் பொறுத்தருளர் வேண்டுமெனப்பிரார்த்திக்க வேண்டும். “தேனில் விருப்பமுள்ள வண்டானது சோலையில் ஒரு புஷ்பத்தினின்றும் நீங்கிப் பிறிதொரு புஷ்பத்திற்குச் செல்லுமாறுபோல, ஞானத்தில் விருப்பமுள்ள சீடன் ஒரு குருவினிடத்தினின்றும் நீங்கி மற்றொரு குருவினிடத்துச் செல்வன்” என்னும் சாத்திரத்தை யநுசரித்து, அதிகமான ஞானத்தையடைதற் பொருட்டு வேறு குருவையடைந்தவிடத்தும் முந்தின குருவையும் முன்போலவே ஆதரித்துப் பூசிக்க வேண்டும்.

See Also  References To Rudhratcham In Thirumurais In Tamil